பல்லவி:
இராகம்: மோகனம்
தாளம்:ஆதி
நலமருள்வாய் நாகபூஷணி தாயே
தலமதில் சிறந்த நயினை வாழ்வே
நலமருள்வாய்...
அனுபல்லவி :
கைலாய வாகனத்தில் காட்சிதரும் அம்மையே
கைலாய நாதனைப் பாகமாய்க் கொண்டவனே
நலமருள்வாய்...
சரணம் :
மணிபல் லவத்தில் மானண்புடன் எழுந்தருளி
தனியாத தாகங்கொள் பக்தர்களை ஆட்கொள்வாய்
அணிகலனாய்க் கரத்தில் அமுதசுரபியை எற்றவளே
பணியாய்ச் சிவசேவகம் பாங்குடன் கொண்டவள் நீ
நலமருள்வாய்...
|